பெப்சி - தயாரிப்பாளர் சங்கம்... பஞ்சாயத்து தீர்ந்ததா?

By Vignesh Selvaraj

சென்னை : பெப்சி தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களைத் தேர்வு செய்ய தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக விளம்பரமும் வெளியானது.

இதனைக் கண்டித்து கடந்த 1-ம் தேதி முதல் பெப்சி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகிறது. இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது.

இதன்காரணமாக 'காலா', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தயாரிப்பாளர் சங்கத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமும் நடைபெறுவதாக இருந்தது.

 பேச்சுவார்த்தை :

பேச்சுவார்த்தை :

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் உடன் பெப்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

 வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் :

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் :

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இரண்டு நாட்களுக்குள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் எனவும் கூறினார்.

 விஷால் :

விஷால் :

பின்னர் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், "புதிய டெக்னிஷியன்களுக்கான அரிய வாய்ப்பு" என்ற விளம்பரத்தைத் திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

 ஆர்ப்பாட்டம் ரத்து :

ஆர்ப்பாட்டம் ரத்து :

இதனிடையே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிராக இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X