Don't Miss!
- Finance 1 கிலோ காளான் ரூ. 1.5 லட்சமா.. சமைச்ச வீடே மணக்கும்..என்னனு பாருங்க!
- Technology Vodafone-க்கு கும்பிடு.. மொத்தமா முடிச்சு விட்டாச்சு.. ஒரே திட்டம்தான்.. டேட்டா, கால்களுக்கு லிமிட் இல்ல!
- Lifestyle காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- News தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு... இப்படியும் 20 கட்சிகள் களத்தில் இருப்பது தெரியுமா?
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சின்னத் திரைப் படப்பிடிப்புகளுக்கு ஸ்ட்ரைக் இல்லை - பெப்சி அறிவிப்பு
தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை முறிந்ததாலும், போட்டி தொழிலாளர் சங்கத்தை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதாலும், காலவரையற்ற ஸ்ட்ரைக்கை கடந்த மூன்று நாட்களாக நடத்தி வருகிறது பெப்சி
ஆனால் போட்டி சங்கத்தைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தப்போவதாக அறிவித்த தயாரிப்பாளர்களால் திட்டமிட்டதுபோல பெருமளவு ஷூட்டிங்குகளை நடத்த முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த ஸ்ட்ரைக்கால் சின்னத் திரையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சின்னத் திரை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பெப்சியிடம், இந்த ஸ்டைரைக்கை வாபஸ் பெறுமாறும், பெப்சியின் நிலைப்பாட்டுக்கு முழு ஆதரவு உண்டு என்றும் அறிவித்தனர்.
இதனால், சின்னத் திரைப் படப்பிடிப்பு மட்டும் இனி தடையின்றி நடக்கும் என்று பெப்சி இன்று அறிவித்துள்ளது.
சினிமாவைப் பொறுத்தவரை ஸ்ட்ரைக் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.