Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஃபெப்சி ஸ்டிரைக்: காலா, மெர்சல் படப்பிடிப்பு ரத்து, விஷால் ஷூட்டிங் மட்டும்...
சென்னை: ஃபெப்சி வேலைநிறுத்தப் போராட்டத்தால் காலா, மெர்சல் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள், சினிமா தொழிலாளர்கள் இடையேயான ஊதிய பிரச்சனைக்கு தீர்வே இல்லாமல் உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சினிமா தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
ஃபெப்சி ஆட்கள் இல்லாமல் வேறு ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தலாம் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். அதன்படி அவரது துப்பறிவாளன் படப்பிடிப்பு எந்தவித பிரச்சனையும் இன்றி இன்று நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா மற்றும் தளபதி விஜய்யின் மெர்சல் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஷாலின் துணிச்சலான முடிவை சில தயாரிப்பாளர்கள் பாராட்டினாலும், பலர் எதிர்க்கிறார்கள். சினிமாவை அழிக்க தனியாக யாரும் தேவை இல்லை விஷாலே போதும் என்கிறார்கள்.