twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர்களுடன்தான் பேசுவேம்... பிலிம்சேம்பர் முடிவு கட்டுப்படுத்தாது! - ஃபெப்சி

    By Shankar
    |

    FEFSI
    சென்னை: சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினையில் இனி தயாரிப்பாளர்களுடன் மட்டும்தான் பேசுவோம். பிலிம்சேம்பர் முடிவு எங்களைக் கட்டுப்படுத்தாது, என ஃபெப்சி அமைப்பினர் கூறியுள்ளனர்.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (ஃபெப்சி) த்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச்செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அ.சண்முகம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

    "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் இதுவரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில்தான் போடப்பட்டு வருகிறது.

    அப்போதெல்லாம் எதிர்ப்போ, மறுப்போ தெரிவிக்காத பிலிம்சேம்பர் திடீரென்று இப்போது ஒரு கூட்டத்தை போட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.

    தற்போது பிலிம்சேம்பர் எடுத்துள்ள முடிவு எந்தவகையிலும் சம்மேளனத்தை கட்டுப்படுத்தாது. மற்ற மாநில தொழிலையும், தொழிலாளர்களையும், பெப்சியையும் பாதிக்கும் வகையில் அறிக்கை விட்டிருப்பது ஏதோ ஒரு உள்நோக்கத்துடனும், தற்போது படம் எடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் நோக்கத்துடனும் உள்ளது.

    நாங்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தொழில் ஒத்துழைப்பு வழங்கி பணியாற்றி வருகிறோம். மீதம் உள்ள சங்கங்களின் சம்பளத்தை பற்றி எப்போது வேண்டுமானாலும் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.''

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    FEFSI, the strong film employees federation today announced that the new decision of Film Chamber hasn't bind them. According to their latest statement, the federation will continue talks on wage revision with only film producers, not with film chamber.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X