Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயாரிப்பாளர்களுடன்தான் பேசுவேம்... பிலிம்சேம்பர் முடிவு கட்டுப்படுத்தாது! - ஃபெப்சி
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (ஃபெப்சி) த்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச்செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அ.சண்முகம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:
"தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் இதுவரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில்தான் போடப்பட்டு வருகிறது.
அப்போதெல்லாம் எதிர்ப்போ, மறுப்போ தெரிவிக்காத பிலிம்சேம்பர் திடீரென்று இப்போது ஒரு கூட்டத்தை போட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.
தற்போது பிலிம்சேம்பர் எடுத்துள்ள முடிவு எந்தவகையிலும் சம்மேளனத்தை கட்டுப்படுத்தாது. மற்ற மாநில தொழிலையும், தொழிலாளர்களையும், பெப்சியையும் பாதிக்கும் வகையில் அறிக்கை விட்டிருப்பது ஏதோ ஒரு உள்நோக்கத்துடனும், தற்போது படம் எடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் நோக்கத்துடனும் உள்ளது.
நாங்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தொழில் ஒத்துழைப்பு வழங்கி பணியாற்றி வருகிறோம். மீதம் உள்ள சங்கங்களின் சம்பளத்தை பற்றி எப்போது வேண்டுமானாலும் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.