Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷ வரலாறு திரைப்படமாகிறது!
துபாய் நிறுவனமொன்று இப்படத்தை தயாரிக்கிறது. ஸ்ரீகுமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இப்படம் மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகிறது. ஹாலிவுட் நிபுணர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மார்த்தாண்டவர்மா வாழ்க்கை கதையோடு இணைத்து பத்மநாபசாமி கோவில் வரலாறைறையும் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பத்மநாபசுவாமி கோயிலை மையப்படுத்தி சினிமா எடுப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே 1933-ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மா என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் பெயர் பிவி ராவ். சுந்தர்ராஜ் என்பவர்தான் இப்படத்தைத் தயாரித்தார். காரணம், 1931-ம் ஆண்டு இந்தக் கோயிலின் இரு ரகசிய அறைகள் திறக்கப்பட்டு பொக்கிஷங்கள் கணக்கிடப்பட்டன, அன்றைய திருவிதாங்கூர் மன்னரால்.
இதனை பிரிட்டிஷ் இந்திய அரசும் பதிவு செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு பதிப்பக வெளியீடாக வந்துள்ள புத்தகத்திலும் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
80 ஆண்டுகளுக்கு முன்பே பொக்கிஷ ரகசியங்கள் அனைத்தும் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரைக்குத் தெரிந்திருந்தும் அவர்கள், இதனை அனந்தபத்ம சுவாமியின் சொத்தாகக் கருதி அமைதி காத்து வந்தனர். பெரும் பஞ்சம், பட்டினி, வறட்சி, சமஸ்தான நிலங்கள் இழப்பு என சோதனைகள் வந்த போதும் இந்த பொன்னை அவர்கள் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுகளையெல்லாம் உள்ளடக்கியதாக புதிய திரைப்படம் உருவாகிறது.