பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷ வரலாறு திரைப்படமாகிறது!

By Shankar

Padmanabha Swamy Temple
திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவிலின் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சம்பவமே மலையாளம் மற்றும் தமிழில் திரைப்படமாகிறது.

துபாய் நிறுவனமொன்று இப்படத்தை தயாரிக்கிறது. ஸ்ரீகுமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இப்படம் மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகிறது. ஹாலிவுட் நிபுணர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளனர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மார்த்தாண்டவர்மா வாழ்க்கை கதையோடு இணைத்து பத்மநாபசாமி கோவில் வரலாறைறையும் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பத்மநாபசுவாமி கோயிலை மையப்படுத்தி சினிமா எடுப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே 1933-ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மா என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் பெயர் பிவி ராவ். சுந்தர்ராஜ் என்பவர்தான் இப்படத்தைத் தயாரித்தார். காரணம், 1931-ம் ஆண்டு இந்தக் கோயிலின் இரு ரகசிய அறைகள் திறக்கப்பட்டு பொக்கிஷங்கள் கணக்கிடப்பட்டன, அன்றைய திருவிதாங்கூர் மன்னரால்.

இதனை பிரிட்டிஷ் இந்திய அரசும் பதிவு செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு பதிப்பக வெளியீடாக வந்துள்ள புத்தகத்திலும் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

80 ஆண்டுகளுக்கு முன்பே பொக்கிஷ ரகசியங்கள் அனைத்தும் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரைக்குத் தெரிந்திருந்தும் அவர்கள், இதனை அனந்தபத்ம சுவாமியின் சொத்தாகக் கருதி அமைதி காத்து வந்தனர். பெரும் பஞ்சம், பட்டினி, வறட்சி, சமஸ்தான நிலங்கள் இழப்பு என சோதனைகள் வந்த போதும் இந்த பொன்னை அவர்கள் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளையெல்லாம் உள்ளடக்கியதாக புதிய திரைப்படம் உருவாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X