Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது தாய்வீடான தமிழ் திரையுலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.
திரைப் பிரபலங்கள் இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, பி வாசு, சேரன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் இன்று காலை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "தமிழகத்தில் இனி இப்படி ஒரு துணிச்சலான வீரத் தலைவி வர வாய்ப்பே இல்லை. அற்புதமான தலைவி," என்றார்.
நடிகர் விவேக் பேசுகையில், "தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போன்ற ஒரு தலைவரை இனி பார்க்க முடியாது. அவரை இழந்து இன்று உண்மையிலேயே தமிழக மக்கள் ஆறாத துயரில் உள்ளனர். தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போலத் தவிக்கின்றனர்," என்றார்.
மேலும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நடிகர் அருண்பாண்டின், நடிகர் பிரபு, விக்ரம் பிரபு, மன்சூர் அலிகான் உள்பட பலரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.