Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
படமா எடுக்கிறாங்க, எங்காவது ஓடிப் போகலாம் போல இருக்கிறது: ஜெயா பச்சன்
மும்பை: தற்போது வரும் படங்களை பார்த்தால் எங்காவது அமைதியான இடத்திற்கு ஓடிப் போக வேண்டும் போல் உள்ளது என பாலிவுட் நடிகை ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்து வரும் மும்பை திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
கலை
முன்பு எல்லாம் இயக்குனர்கள் படங்கள் மூலம் கலையை உருவாக்கினார்கள். ஆனால் தற்போது படம் என்பது பணம் மற்றும் வியாபாரம் ஆகிவிட்டது.
வெட்கம்
காய் மறை இலை மறையாக எதையும் தற்போது கூறுவது இல்லை. மக்களுக்கு அப்படி கூறுவதே மறந்துவிட்டது. அன்பை வெளிப்படையாக காட்டுவது சிறப்பு என்று நினைக்கிறார்கள். மக்கள் வெட்கப்படுவதே இல்லை.
பாக்ஸ் ஆபீஸ்
தற்போது பாக்ஸ் ஆபீஸ் என்கிறார்கள், ரூ. 100 கோடி படங்களாம், முதல் வார வசூலாம். இது எல்லாம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த காலத்தில் வரும் படங்களில் ஒரு சிலவற்றில் மட்டுமே இந்திய கலாச்சாரம் தெரிகிறது.
சினிமா
உணர்ச்சிகளை, சொல்ல விரும்புவதை சப்தமில்லாமல் அழகாக சொல்லலாம். ஆனால் தற்போது உள்ள சினிமாவில் எதையும் பளிச்சென்று சப்தமாக கூறுவதை பார்த்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது. எங்காவது அமைதியான இடத்திற்கு ஓடிப் போகத் தோன்றுகிறது.