Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
தமிழக திரையுலக வரலாறு குறித்து அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ள பிலிம் நியூஸ் ஆனந்தனின் சேகரிப்புகள்அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
அவரது சேகரிப்புகளுக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளது.
தமிழக சினிமா குறித்த அனைத்து வரலாற்றுத் தகவலகளையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பழையபடங்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர்கள் என எந்த விவரம் கேட்டாலும் தருவார்.
இப்போதும் கூட அரசுக்கோ, திரைப்படத் துறையினக்கோ திரைப்படம் தொடர்பான பழைய விவரம், கோப்பு ஏதும்வேண்டுமென்றால் சென்னை பீட்டர்ஸ் ரோட்டில் உள்ள இவரது வீட்டுக் கதவைத் தான் தட்டுவார்கள்.
அரும்பாடு பட்டு பல அரிய தகவல்களை சேகரித்து வைத்துள்ளார். பல படங்களில் பி.ஆர்.ஓ. ஆகவும் பணியாற்றியுள்ளார்.
1930ம் ஆண்டில் இருந்து தமிழக படங்கள் குறித்த தகவல்கள், படங்களை வைத்துள்ளார்.
சமீபத்தில் இவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். தனது சேகரிப்புகளை அரசு எடுத்து பாதுகாக்கவேண்டும் எனவும், இதற்கு ஒரு தொகையை நிர்ணயித்து வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க ஒரு குழுவை அரசு நியமித்தது.
அக் குழுவினர் ஆனந்தனின் சேகரிப்புகளைப் பார்வையிட்டனர். இதில் பல தொகுப்புகள் மிக அரியவை என்பதால் உடனேஅவற்றை அரசே எடுத்து பாதுகாக்க வேண்டும் என பரிந்துரைத்தனர். இதற்காக தமிழ் திரை உலக வரலாற்றுக் காட்சியகத்தைஅமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட அரசு பிலிம் நியூஸ் ஆனந்தனின் படைப்புகளை அரசுடமையாக்குவதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட50 ஆண்டுகளாக பல சிரமங்களுக்கு இடையே இத்தனை தகவல்களையும் சேகரித்து அதை பாதுகாத்தும் வந்த பிலிம் நியூஸ்ஆனந்தனுக்கு ரூ. 10 லட்சத்தை ஈடாகத் தந்துள்ளது அரசு.
முதல்வர் ஜெயலலிதா இன்று இதற்கான காசோலையை ஆனந்தனிடம் வழங்கினார்.
மேலும் ஆனந்தன் எழுதியுள்ள தமிழ் திரையுலக வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிடவும் அச்சிடவும் ரூ. 5 லட்சம் தரவும்உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.
கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.