Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கிளம்பிட்டாங்கய்யா... நேற்று தொடங்கிய எந்திரன் 2-க்கு எதிராக ஆர்ப்பாட்ட அறிவிப்பு!
ரஜினி நடிக்கும் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பிரஸ்மீட்டும் நேற்று நடந்து முடிந்தது.
இந்த நிகழ்வுகள் முடிந்த 24 மணி நேரத்துக்குள் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது.
காரணம் என்ன?
இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்த எமி ஜாக்ஸன் நாயகியாக நடிக்கிறாராம். எனவே அவரை உடனடியாகத் தூக்காவிட்டால், இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கும் அத்தனை இடங்களிலும் வந்து ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவர் கூறியுள்ளார்.
தமிழர் மண்ணில் பிழைப்புக்காக வந்த எமி ஜாக்ஸன் எப்படி தமிழரின் வீர விளையாட்டை தடை செய்ய ஆதரவு தெரிவிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இன்னும் மூன்று தினங்களுக்குள் எமி ஜாக்ஸனை படத்திலிருந்து நீக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
2.0-க்கு இன்னும் எத்தனைப் பஞ்சாயத்து காத்திருக்கோ தெரியலையே!