கால் சென்டராய் மாறிய பிக்பாஸ் வீடு.. பாலாஜியிடம் டவுட்டை க்ளீயர் பண்ணிய அர்ச்சனா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடின் போது ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்கவில்லை.
நேற்று நடந்த சம்பவங்களை எல்லாம் வைத்து பாலாஜி, நிஷா, ரம்யா பாண்டியன், அர்ச்சனா போன்ற போட்டியாளர்களை விளாசி வருகின்றனர்.

கால் சென்டர்
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் புதிய டாஸ்க்குகளை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி பிக்பாஸ் வீடு அடுத்த இரண்டு நாட்களுக்கு கால் சென்டராக மாறப்போகிறது என டாஸ்க்கை படிக்கிறார் ரியோ.

கேள்விகள்
நீங்கள் கால் செய்யும் ஊழியரிடம் , நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த வரைமுறையும் கிடையாது என கூறப்பட்டுள்ளது. இதில் பாலாஜி, சம்யுக்தா, ஆஜித், கேபி, ரமேஷ் உள்ளிட்டோர் கால் சென்டர் ஊழியர்களாக உள்ளனர்.

பாலாஜிக்கு கால்
ரியோ, சோம், நிஷா, ரம்யா, சனம், ஆரி ஆகியோர் கஸ்டமர்களாக உள்ளனர். இதில் கன்ஃபெஷன் ரூமுக்கு செல்லும் அர்ச்சனா அங்கிருந்து கால் சென்டர் ஊழியரான பாலாஜிக்கு கால் செய்கிறார்.

பெயர்களை சொல்லுங்கள்
தொடர்ந்து பேசும் அர்ச்சனா, உங்களுக்கு பிடிச்சவங்களை மட்டும்தான் முன்னாடி வச்சு விளையாடுறீங்கன்னு சொன்னீங்க, அவங்களோட பெயர்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுறேன் என்கிறார்.

டிவியில் ஒளிபரப்பு
அதற்கு பதில் சொல்லும் பாலாஜி, முதலில் சோம், இரண்டாவது ரியோ மூன்றாது கேபி என நேருக்கு நேராக சொல்கிறார். அதனை சிரித்தப்படியே கேட்கிறார் அர்ச்சனா. பாலாஜிக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் பிக்பாஸ் வீட்டின் லிவிங் ஏரியாவில் உள்ள டிவியில் ஒளிபரப்படுகிறது.

டவுட் க்ளீயர்
இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ. நேற்று அவ்ளோ பிரச்சனை நடந்தும் அதன் சுவடே இன்றைய புரமோவில் தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட டவுட்டை அர்ச்சனா பாலாஜியிடம் கேட்ட க்ளீயர் செய்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











