Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அஜீத்துக்கு மாரடைப்பு என வதந்தி பரப்பியவரை கண்டுபிடித்துவிட்டோம்: மேனேஜர்
சென்னை: அஜீத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலியான ட்வீட் போட்ட நபரை கண்டுபிடித்துவிட்டதாக அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
அஜீத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த தகவல் உண்மை இல்லை என்று அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். அவரது ட்விட்டர் கணக்கு போன்றே போலியான ஒன்றை உருவாக்கி தான் அஜீத்தின் உடல்நலம் குறித்த செய்தியை யாரோ வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சுரேஷ் சந்திரா கூறுகையில்,
இப்படியுமா?
நடிகர்கள் பற்றி போலியான செய்திகளை பரப்ப மக்கள் இந்த அளவுக்கு செல்வார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்தது இல்லை.
ட்விட்டர்
என் ட்விட்டர் கணக்கு போன்றே போலியான கணக்கு உருவாக்கப்பட்டு அதில் அஜீத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ட்வீட் செய்யப்பட்டதை பார்த்து நான் அப்படியே அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.
பொய்
அந்த போலி ட்விட்டர் கணக்கில் போடப்பட்டிருந்த ட்வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். உடனே எனது ட்விட்டர் கணக்கில் அஜீத்தின் உடல்நலம் பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை என்பதை விளக்கினேன்.
கண்டுபிடித்துவிட்டோம்
அஜீத் பற்றி பொய்யான தகவலை வெளியிட்ட விஷமியை கண்டுபிடித்துவிட்டோம். ஆதாரம் கிடைத்த உடன் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார் சுரேஷ் சந்திரா.