Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நண்பனின் பகையே ஆபத்தானது! - கோச்சடையான் புது விளம்பரம் சொல்வது என்ன?
சென்னை: இன்றிலிருந்து மீண்டும் வெளி வர ஆரம்பித்துள்ளன கோச்சடையான் விளம்பரங்கள்.
இத்தனை நாள் புதுமையில் ஒரு பெருமை என்ற முத்திரை வரிகளுடன் வெளி வந்த கோச்சடையான் விளம்பரங்கள், இப்போது எதிரியின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது என்ற வரிகளுடன் வெளியாகியுள்ளன.
கோச்சடையான் படம் வரும் மே 9-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நாளிதழ்களில் விளம்பரங்கள், டிவி, தியேட்டர்களில் ட்ரைலர்கள் வெளியாகின.
ஆனால் திடீரென நான்கு தினங்களாக நாளிதழ் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து படம் குறித்து பலவிதமான வதந்திகள் பரவின.
ஆனால் கோச்சடையான் படக்குழு இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. பத்திரிகையாளர்கள் விசாரித்தபோதும், 'யாரோ சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள். படம் தொடர்பாக எந்த செய்தியாக இருந்தாலும், அதை நாங்கள்தானே தர வேண்டும்? படத்துக்கு எந்த சிக்கலும் இல்லை. இது ரஜினி படம். அதற்குரிய மரியாதையுடன் வெளியாகும்' என்றே விளக்கம் அளித்தனர்.
வெள்ளிக்கிழமை முதல் படத்தின் விளம்பரங்கள் வெளியாகும். 5000 திரையரங்குகள் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன, என்று தெரிவித்தனர்.
சொன்னது போலவே இன்று வெள்ளிக்கிழமை படத்தின் விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாகத் தொடங்கிவிட்டன.
இத்தனை நாள் விளம்பரங்களில் புதுமையில் ஒரு புதுமை என்ற முத்திரை வரிகள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய விளம்பரம் 'எதிரியின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது' என்ற வரிகளுடன் வெளியிட்டுள்ளனர்.
இது படத்தில் இடம்பெறும் பாடலின் ஒரு வரி. ரஜினிகாந்த் குரலில் ஒலிப்பதுதான் என்றாலும், படம் குறித்து ரஜினியின் நட்பு வட்டத்தில் உள்ள சிலரே தப்புத் தப்பாக பொது விழாக்களில் பேசியதைக் குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளது.