Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தினேனா? பெண் கலைஞர் மீது நடன இயக்குனர் பதில் புகார்
மும்பை: ஆபாச வீடியோவை பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாக புகார் கூறிய பெண் கலைஞர் மீது, நடன இயக்குனர் பதில் புகார் கொடுத்துள்ளார்.
தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா.
சென்னையில் பிறந்த கணேஷ் ஆச்சார்யா, இப்போது இந்தி சினிமாவின் பிரபல நடன இயக்குனராக இருக்கிறார். இவர், கேஜிஎப், பத்மாவத், சர்கார் 3, பாஜிரோவ் மஸ்தானி, ரங் தே பசந்தி உட்பட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். பல படங்களில் நடித்தும் உள்ளார்.
மீ டு புகார்
நடிகை தனுஶ்ரீ தத்தா, நடிகர் நானே படகேர் மீது மீ டு புகார் கூறியபோது இவர் மீதும் புகார் கூறியிருந்தார். இது பரபரப்பாகி இருந்தது. அப்போது தனுஶ்ரீயின் புகாரை கணேஷ் ஆச்சரியா மறுத்திருந்தாலும் தனுஶ்ரீ அவரை பொய்யர் என்று கூறியிருந்தார்.
ஆபாச வீடியோ
இந்நிலையில், 33 வயது பெண் நடன கலைஞர் ஒருவர், கணேஷ் ஆச்சார்யா மீது பரபரப்பு புகார் கூறினார். அதில், தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கணேஷ் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் அவர் இந்தப் புகாரை கொடுத்திருந்தார்.
நடன இயக்குனர்
கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான், நடன கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருந்து கொண்டு நடன கலைஞர்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பதாக கணேஷ் ஆச்சார்யா மீது புகார் கூறியிருந்தார். இதை அவர் மறுத்திருந்த நிலையில் அந்தப் பெண் இந்தப் புகாரை தெரிவித்திருந்தார்.
ஆதாரமற்றவை
இந்நிலையில் அந்த நடன கலைஞரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கணேஷ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'கடந்த 2007 ஆம் ஆண்டு அவர் குரூப் டான்சராக என் குழுவின் இருந்தார். அதற்கு பிறகு அவரை பற்றி எனக்குத் தெரியாது. அவர் கூறியுள்ள ஆபாச வீடியோ விவகாரம் ஜோடிக்கப்பட்டவை என்று தெரிவித்தார்.
மான நஷ்ட வழக்கு
அதோடு, பெண் நடன கலைஞர் பொய் புகார் கொடுத்துள்ளதாக அவர் மீது, ஓஷிவாரா மற்றும் அம்போலி காவல் நிலையங்களில், கணேஷ் ஆச்சார்யா புகார் கொடுத்துள்ளார். விரைவில் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர இருப்பதாகவும் கணேஷின் வழக்கறிஞர் ரவி சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.