Don't Miss!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Technology
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
காதல் முறிவிற்குப் பின் மீண்டும் இணையும் கவுதம் கார்த்திக்-பிரியா ஆனந்த்
சென்னை: வை ராஜா வை படத்தைத் தொடர்ந்து கவுதம் கார்த்திக் -பிரியா ஆனந்த் ஜோடி மீண்டும் ஒருமுறை முத்துராமலிங்கம் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறது.
கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ, வை ராஜா வை போன்ற படங்களும் கடல் படத்தைப் போன்றே பெரியளவில் எடுபடவில்லை.

இந்நிலையில் தற்போது முத்துராமலிங்கம் என்ற புதிய படத்தில் நாயகனாக கவுதம் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.
வை ராஜா வை படத்தில் நடிக்கும் போது கவுதம் கார்த்திக்-பிரியா ஆனந்த் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு டேட்டிங் சென்றதாகவும், இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள் என்றும் பல்வேறு வதந்திகள் வெளியாகின.
ஒரு கட்டத்தில் இருவரின் காதலும் முடிவிற்கு வந்ததாகவும் இதனால் பிரியா ஆனந்த் அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்று விட்டதாகவும் கூட கூறினர்.ஆனால் இது குறித்து இருவரும் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.
இந்நிலையில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லாத பிரியா ஆனந்த் மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து முத்துராமலிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த ஜோடி மீண்டும் இணைந்திருப்பது தமிழ் சினிமாவில் பலரின் புருவத்தையும் உயர்த்தச் செய்திருக்கிறது.
கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்துடன் இணைந்து பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
இளையராஜாவின் 1001 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார்.
இந்தப் படத்தின் மூலம் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவுடன், பஞ்சு அருணாசலம் கைகோர்ப்பது குறிப்பிடத்தக்கது.