Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா.. தயாரிப்பாளர் கவுதம் மேனன்?
சென்னை: இயக்குநர் செல்வராகவனின் புதிய படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க, படத்தை கவுதம் மேனன் தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா இவர் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
செல்வராகவன் எழுதியிருக்கும் ஒரு திகில் கதையில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க, படத்தை கவுதம் மேனன் தயாரிப்பார் என்று கூறுகின்றனர்.
சிம்புவை வைத்து இயக்கி வந்த கான் திரைப்படத்தை பாதியில் நிறுத்தியபோது, தனுஷ் படத்திற்காகத் தான் இந்த மாதிரி செல்வராகவன் செய்தார் என்று பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டது.
ஆனால் தங்கமகன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஈட்டாததால் தனது அடுத்தடுத்த படங்களில் தனுஷ் தற்போது அதிரடியாக பல மாற்றங்களை செய்து வருகிறாராம்.
இதனால் தனுஷை இயக்க செல்வராகவன் காத்திருக்கும் சூழல் தற்போது உருவாகி இருக்கிறது. இந்த இடைவெளியில் ஒரு படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்த செல்வராகவன் எஸ்.ஜே.சூர்யாவை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கும் திட்டத்திற்கு வந்திருக்கிறார்.
மேலும் இந்தப் படத்தை விரைவில் முடித்து விடவும் செல்வராகவன் திட்டமிட்டு இருக்கிறாராம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.