Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பெப்சி போராட்டம்: ஹைதராபாதில் கெளதம் மேனன் படப்பிடிப்பு ரத்து!
'பெப்சி' போராட்டம் காரணமாக, ஐதராபாத்தில் நடைபெற இருந்த கவுதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) சேர்ந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள், சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து பெப்சி' தொழிலாளர்களுடனும், பட அதிபர்களுடனும் தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியது. மீண்டும் வருகிற 9-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
நீதானே என் பொன் வசந்தம்
இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்க, ஜீவா-சமந்தா நடிக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' என்ற படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நேற்று நடைபெறவிருந்தது. 'பெப்சி' போராட்டம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
"இந்த படம், தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது. ஹைதராபாத்தில் நடைபெற இருப்பது தெலுங்கு படப்பிடிப்பு. எனவே படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்று தெலுங்கு சினிமா தொழிலாளர்களிடம், கவுதம் மேனன் கேட்டுக்கொண்டார்.
பெப்சிக்கு ஆதரவு
ஆனால் அதற்கு அங்குள்ள சினிமா தொழிலாளர்கள் சம்மதிக்கவில்லை. "பெப்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால், இந்த படத்தில் நாங்கள் வேலை செய்ய மாட்டோம்'' என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அதைத் தொடர்ந்து, நீதானே என் பொன் வசந்தம்' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.