'வேறு வழியில்லை... இந்த சிம்புவை விட்டு வெளுக்க வேண்டியதுதான்!'- கடுப்பில் கவுதம் மேனன்
இதற்கு முன்பு எந்த பேட்டியிலும் சிம்புவை இந்த அளவுக்கு கவுதம்மேனன் டேமேஜ் பண்ணியதில்லை தன்னுடைய ஹீரோவை எங்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தவரையே, தன்னை பற்றி பக்கம் பக்கமாக புலம்பி பேட்டியளிக்க வைத்துவிட்டார் சிம்பு. அந்த அளவுக்கு டார்ச்சர் கொடுத்திருக்கிறார் போல...
இவ்வளவு நடந்துடுச்சு... இனிமே என்ன...? என்று சிம்பு விஷயத்தில் இறங்கி அடிக்கிறார் கவுதம். அச்சம் என்பது மடமையடா படத்தின் தமிழ் ஆடியோ வெளியீட்டு விழாவை சிம்புவை கடுப்பாக்குவதற்காக தள்ளி வைத்தவர், இப்போது தெலுங்குப் பதிப்புக்கான வெளியீட்டை பெரிய அளவில் நடத்தியும் விட்டார்.

அடுத்ததாக சிம்பு மீது இயக்குனர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
சிம்பு ஒத்துழைக்க மறுத்தால் தெலுங்கு பதிப்பை ரிலீஸ் செய்து படத்தையே காலி செய்தாலும் செய்வார் கவுதம்மேனன் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











