Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினி, கமலுக்கு முன் நாம முந்திக்கிட்டா என்ன? - தமிழக அரசு யோசனை
தற்போது சினிமா உலகில் நடந்து வரும் வேலை நிறுத்தத்தை தமிழக அரசின் கவனத்திற்கு உளவுத் துறை கொண்டு சென்றுள்ளது.
தயாரிப்பாளர்கள் ஒருபக்கம், திரையரங்க உரிமையாளர்கள் இன்னொரு பக்கம் என அரசுத் தரப்பை அணுகி வருகின்றனர். இதற்கிடையில் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண திரைப்பட துறையினர் ரஜினி, கமல் இருவருக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர், திரையுலகினர்.
ரஜினியும் கமலும் இப்பிரச்சினை சம்பந்தமாக பேசி, திரைத்துறைக்குள் அசைக்க முடியாத சக்திகளாக மாறுவதற்குள் தமிழக அரசு தலையிடுவது ஆளுங்கட்சிக்கு நல்லது என அதிமுக நலம் விரும்பிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
எனவே தமிழக அரசு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் அங்கம் வகிக்கும் குழு ஒன்றை அமைக்க அறிவிப்பு வெளியிட உள்ளதாக தலைமை செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் இறுதிக்குள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென தனிக் குழு அமைக்கப்படுவதாக விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.