Don't Miss!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'சார்ஜ்ஷீட்' நகலைப் பெற்றார் கிரகலட்சுமி
நடிகர் பிரசாந்துக்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கிரகலட்சுமிக்கும், வேணு பிரசாத்துக்கும் கல்யாணம் நடந்து விட்டதாகவும், அதை மறைத்து தன்னை கிரகலட்சுமி கல்யாணம் செய்து கொண்டதாக பிரசாந்த் பரபரப்பு புகாரைக் கூறினார்.
இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்ப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரகலட்சுமி, அவரது தந்தை தனசேகரன், தாய் சிவகாமசுந்தரி, பணம் கேட்டு மிரட்டிய அவரது அண்ணன்கள் நாகராஜன், பொன்குமரன், அண்ணி அபிராமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் அருணாசலம், இது குறித்து பாண்டி பஜார் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதன்படி போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்தனர். இதற்கிடையில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் இந்த வழக்கு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கிரகலட்சுமி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் கிரகலட்சுமியின் மனுவை மாஜிஸ்திரேட் அருணாசலம் தள்ளுபடி செய்ததுடன், குற்றப்பத்திரிகை நகலை நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ள உத்தரவிட்டார்.
இதன்படி கிரகலட்சுமி தனது தந்தையை தவிர மற்றவர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. கிரகலட்சுமியின் தந்தையின் குற்றப்பத்திரிகை நகலை அவரது வழக்கறிஞர் பெற்றுக் கொண்டார்.