ஏங்க, திறமைசாலியை மதிக்கவே மாட்டீங்களா?: ஜி.வி. பிரகாஷ் கோபம்
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.
நடிப்பு, இசை என்று பிசியாக இருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் சமூக பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பேசத் தவறுவது இல்லை. சில சமயம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்கிறார்.

இந்நிலையில் அவர் கண்ணில் பட்ட செய்தி ஒன்றை பார்த்துவிட்டு கோபம் அடைந்துள்ளார். திறமைசாலியை மதிக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தானாக தெருவிளக்குகள் பகலில் அணைந்து இரவில் எரியும் சென்சேஷன் சுவிட்ச் கண்டுபிடித்து 1,500 முறை மனு கொடுத்தும் அங்கீகாரம் கிடைக்காததால் ஆவணங்களை வீசிச் சென்ற ஈரோடு விஜயமங்கலம் குறித்த செய்தியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
இந்த செய்தியை அதிகம் பகரிந்து அந்த இளைஞருக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று இந்த முறய்சியில் ஈடுபட்டுள்ளார் ஜி.வி.


Click it and Unblock the Notifications











