Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உல்டாவா செய்யும் ஹன்சிகா: அவர் என்ன ஆசைப்பட்டா அப்படி செய்றார்?
சென்னை: அதர்வாவை அடுத்து மற்றொரு இளம் ஹீரோவுடன் நடிக்கிறார் ஹன்சிகா.
தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட் வந்தார் ஹன்சிகா. தளபதி விஜய், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், சூர்யா,விஷால், சித்தார்த் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
தற்போது அவர் மார்க்கெட் நிலவரம் சரியில்லை. பெரிய ஹீரோக்கள் படங்களில் நடித்த அவர் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
பிரபுதேவா
வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிரபுதேவாவுடன் சேர்ந்து குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. அந்த படம் வரும் 12ம் தேதி ரிலீஸாக உள்ளது.
ஹன்சிகா
அதர்வா முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஹன்சிகா. இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
துப்பாக்கி முனை
மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த தினேஷ் செல்வராஜ் இயக்கும் துப்பாக்கி முனை படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
கதை
இயக்குனர் மும்பைக்கே வந்து என்னை சந்தித்து கதை சொன்னார். கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ளது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.