Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஷுட்டிங் முடிஞ்சிடுச்சு...விஜயகாந்த் நடித்தாரா? இல்லையா?...டைரக்டர் சொன்ன ஹாட் நியூஸ்
சென்னை : டைக்டர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆன்டனி நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், பிரனிகி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அன்சு ராஜாமணியுடன் இணைந்து விஜய் ஆன்டனி இசையமைத்து, நடித்துள்ளார்.
ஏற்கனவே விஜய் ஆன்டனி நடித்துள்ள தமிழரசன், அக்னி சிறகுகள், ரதம், பிச்சைக்காரன் 2 என வரிசையாக பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் பற்றியும் அறிவிக்க உள்ளதாக கூறினார்கள்.
நான் பேசியதில் என்ன தவறு இருக்கு...சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த சாய் பல்லவி
முதல் தமிழ் படம்
தனித்துவமான கதை அம்சம் கொண்ட படம் என கூறப்படும் மழை படிக்காத மனிதன் படத்தின் பெரும்பாலான பகுதிகள் டையூ மற்றும் டாமன் தீவுகளில் படமாக்கப்பட்டது. இங்கு படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது தான். இந்த படத்தில் சரத்குமார் மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் மீண்டும் நடிக்கும் படம்
இந்த படத்தின் ஹைலைட்டாக ஆரம்பம் முதல் சொல்லப்பட்ட விஷயம், நடிகர் விஜயகாந்த் இந்த படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்பது தான். உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து ஒதுங்கி, ஓய்வில் இருந்து வருகிறார் விஜயகாந்த். கட்சிப் பணிகளை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகிறார்கள்.
விஜயகாந்த் நடித்தாரா? இல்லையா?
மழைபிடிக்காத மனிதன் படத்தில் விஜய்காந்த் நடிக்கிறார் என்றும், பிறகு நடிக்கவில்லை என்றும் பல தகவல்கள் கூறப்பட்டது. இந்த சமயத்தில் படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜயகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதா, அவர் நடித்து முடித்து விட்டாரா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
டைரக்டர் என்ன சொல்றார்
இது பற்றி டைரக்டர் விஜய் மில்டனிடம் கேட்டதற்கு, படம் நன்றாக வந்திருக்கிறது. விஜய் ஆன்டனியுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. விஜய்காந்த் இந்த படத்தில் சில காட்சிகளில் நடிப்பதாக கூறி இருந்தோம். ஆனால் அவர் நடிக்கும் காட்சிகள் இதுவரை படமாக்கப்படவில்லை. தொடர்ந்து அது தாமதமாகி வருகிறது. அவரது உடல்நிலை காரணமாக அவரால் வெளியே வர முடியவில்லை.
காத்துக் கொண்டிருக்கிறோம்
ஆனால் அவரது பகுதி படத்திற்கு மிகவும் முக்கியமானது. அதனால் நிச்சயம் அவர் நடிக்கும் பகுதிகளை படமாக்குவோம். ஆனால் படத்தில் அவர் நடிப்பாரா அல்லது வெறும் வாய்ஸ் மட்டும் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதற்காக தான் நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
மேகா ஆகாசை பாராட்டிய டைரக்டர்
மேகா ஆகாஷ் பற்றி கூறுகையில், அவர் மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளார். அவரது முந்தைய படங்களை விட இதில் மிக சிறப்பாக நடித்துள்ளார். மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என பாராட்டினார் விஜய் மில்டன்.