Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கெத்து வரிவிலக்கு.... தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
சென்னை: கெத்து படத்துக்கு வரி விலக்கு அளிக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்துக்கு வரி விலக்கு அளிக்க கோரி இந்த திரைப்படத்தை தயாரித்த ரெட் ஜெயின்ட் மூவி நிறுவனம் தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்தது.
இந்த மனுவை பரிசீலித்த தமிழக அரசு, ‘கெத்து' என்பது தமிழ் சொல் அல்ல. அதனால் வரி விலக்கு சலுகை வழங்க முடியாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, 'கெத்து' என்பது தமிழ் சொல்தான். எனவே, வரிவிலக்கு அளிக்க மறுத்த தமிழக அரசு உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்கவேண்டும்,' என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து வணிக வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், 'கெத்து' படத்துக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி துரைசாமி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.