விபத்தில் சிக்கி அவர் இறந்துவிட்டார்: நடிகர் சிவா இரங்கல்
Recommended Video

சென்னை: பள்ளி காலத்தில் இருந்து தனக்கு தெரிந்த நபர் விபத்தில் சிக்கி பலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார் நடிகர் சிவா.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் தமிழ் படம் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவா. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெறிக்கிவிட்டனர். இதனால் படத்தை பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது.
கடந்த 14ம் தேதி சிவா ட்வீட் ஒன்று போட்டிருந்தார்.
காணவில்லை
பள்ளி காலத்தில் இருந்து தனக்கு தெரிந்த பிரவீன் என்கிற 26 வயது வாலிபரை காணவில்லை என்றும், சற்று மனநலம் குன்றிய அவரை பார்த்தால் தகவல் அளிக்குமாறும் கேட்டு புகைப்படத்துடன் ட்வீட்டியிருந்தார் சிவா.

எஸ்.ஆர். பிரபு
பிரவீனை காணவில்லை அவரை யாராவது பார்த்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டு தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபவும் ட்வீட்டியிருந்தார். பின்னர் பிரவீன் கிடைத்துவிட்டதாக தெரிவித்து அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.
வருத்தம்
பிரவீனை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவா. மேலும் பிரவீன் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சிவா.
இரங்கல்
பிரவீன் இறந்துவிட்டதாக சிவா ட்வீட்டியிருப்பதை பார்த்த நெட்டிசன்ஸ் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ யார் அந்த பிரவீன் என்று கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











