Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாலிவுட் பற்றி பெரிய குண்டை தூக்கிப் போட்ட ஹேம மாலினி
மும்பை: நடிகர்களுக்கு எவ்வளவு வயதானாலும் ஹீரோவாகவே நடிக்கிறார்கள். என் வயது நடிகைகளை வைத்து யாரும் படம் எடுக்க விரும்பவில்லை என்று ஹேம மாலினி தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவுக் கன்னியாக இருந்தவர் ஹேமமாலினி(68). தற்போது அவர் அம்மா, பாட்டி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அரசியலிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். பாஜக எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில் ஹேமமாலினிக்கு ஒரு வருத்தம் உள்ளது.
நடிகைகள்
தற்போது என் வயது நடிகைகளை மையமாக வைத்து யாரும் படம் எடுக்க விரும்புவது இல்லை. தற்போதும் எங்களால் படத்தை எங்கள் தோளில் தாங்க முடியும். நம்புங்கள். இன்னும் சொல்லப்படாத கதைகள் உள்ளன என்கிறார் ஹேமமாலினி.
மாதுரி தீக்சித்
மாதுரி தீக்சித், ஜூஹி சாவ்லா, ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரை ஏன் அடிக்கடி ஹீரோயின்களாக பார்க்க முடிவது இல்லை. இந்த கேள்விக்கு பாலிவுட் இயக்குனர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.
அனுஷ்கா
ஆண்களுக்கு வயதானாலும் கூட அவர் விரும்பும் வரை ஹீரோக்களாகவே நடிப்பார்கள். ஆனால் நடிகைகள் இளமையாக இருக்கும் வரை தான் மவுசா? என்று நடிகை அனுஷ்கா சர்மா கூட கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட்
பாலிவுட்டில் ஆண்களுக்கு ஒரு சட்டம், பெண்களுக்கு ஒரு சட்டமா என்று ஹேமமாலினியும், அனுஷ்கா சர்மாவும் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்பதும் நியாயம் தானே.