Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக (என்.எஃப்.டி.சி.) தலைவராக ஹிந்தித் திரைப்பட நடிகை ஹேமமாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு அமைப்பான என்.எஃப்.டி.சி.யின் தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேமமாலினியின்நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் கமிட்டி ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான ஒரு கடிதமும் ஹேமமாலினிக்குஅனுப்பப்பட்டுவிட்டது.
கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஹேமமாலினி, என்.எஃப்.டி.சி. தலைவராக பொறுப்பேற்ற ஒப்புக் கொண்டார். இருப்பினும், அது தொடர்பாக தனதுஅதிகாரப்பூர்வமான ஒப்புதலை எழுத்துமூலம் இன்னும் அவர் அளிக்கவில்லை.
என்.எஃப்.டி.சி. அமைப்பின் தலைவர் மட்டுமல்லாமல் அமைப்பின் பிற இயக்குநர்கள் பதவிக்கான நபர்களையும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
என்.எஃப்.டி.சி. அமைப்பின் தலைவராக இருந்த தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் டி.வி.எஸ். ராஜு, 1993-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். அவருக்குப்பிறகு இதுவரை தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.