Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த வருடம் சிரஞ்சீவி வீட்டில் இனைந்த தென்னிந்திய நடிகர்கள்
Recommended Video
சென்னை: 80களின் சினிமா தான் இந்தியாவில் சினிமா மிகபெரிய வளர்ச்சி கண்ட வருடமாகும் ,அப்போது மிகபெரிய நடிகர் நடிகைகளும் உருவாகினார்கள் . 80கள் தான் இந்திய மற்றும் தென்னிந்திய சினிமாவின் பொற்காலம் என்று கூட சொல்லலாம் .
தற்போது சினிமா வளர்ச்சியில் பல விசயங்கள் மாறி விட்டன 80களில் நடித்த பல நடிகர் நடிகைகள் ஓய்வு பெற்று விட்டனர் ,சிலர் சூப்பர் ஸ்டாராக இருக்கின்றனர்,சிலர் சீரியல்களில் நடித்து வருகின்றனர் சிலர் இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படி தென்னிந்திய சினிமாவில் பல்வேறு படங்களில் இனைந்து பணியாற்றிய நண்பர்கள் வருடாவருடம் ஒரு நடிகர் அல்லது நடிகையின் வீட்டில் இனைந்து தங்களது நினைவுகள் தற்போது நிலவரங்கள் என பல விசயங்களை பேசி நேரம் கழிப்பது உண்டு ,இப்படி வருடாவருடம் இந்த நடிகர்கள் குடும்பம் இனைந்து தங்கள் நேரத்தை செலவிட்டு பின் தாங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை பகிர்வது உண்டு .
இது வருடாவருடம் நடக்கும் ஒர் நிகழ்வுதான் ,இதையடுத்து இந்த வருடம் இந்த நிகழ்வு நடிகர் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி வீட்டில் நடைப்பெற்று உள்ளது ,இந்த நிகழ்வில் தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பல நடிகர் நடிகையும் ஒரே நிற ஆடையில் இனைந்து தங்களது நேரத்தை ஒன்றாக செலவிட்டு பின்னர் ,அவர்கள் இனைந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளனர் .
இந்த வருடம் நடிகர் சிரஞ்சீவி தலைமையில் நடந்த நிகழ்வில் பிரபு முதல் பாக்கியராஜ் ,குஷ்பு வரையிலான தமிழ் நடிகர்களும் ,வெங்கடேஷ் முதல் நாகர்ஜுனா வரையிலான தெலுங்கு நடிகர்களும் ,மோகன்லால் முதல் ஜெயராம் வரையிலான மளையாள நடிகர்களும் மேலும் சில கன்னட மற்றும் ஹிந்தி நடிகர்களும் கலந்து கொண்டனர் .இதில் போன வருடம் போல் ரஜினியும் கமலும் கலந்து கொள்ளவில்லை .
இப்படி பட்ட நண்பர்கள் ஒன்று சேறும்போது ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது , சூப்பர் ஸ்டார் ரஜினியும் சில சமயங்களில் கலந்து கொண்டு நிறைய புகைப்படம் எடுத்தது உண்டு. பெரும்பாலும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஆச்சிரிய படுத்துவார்கள். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சந்திப்பிலும் வேறு வேறு நிறம். ஒரு முறை அனைவரும் வெள்ளை நிற ஆடை, இன்னொரு முறை அனைவரும் சிகப்பு நிற ஆடை என்று வண்ணங்களால் தங்களது சினிமா வாழ்க்கையை களர்புல்லாக மாற்றிய காலங்களை பதிவு செய்கின்றனர் .