Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஹ்மான் ட்வீட்டுக்கு அர்த்தம் கேட்ட இந்திக்காரர்கள்: தமிழர்கள் பலே விளக்கம்
Recommended Video
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தமிழில் போட்ட ட்வீட் புரியாமல் அர்த்தம் கேட்ட இந்திக்காரர்களுக்கு தமிழ் ரசிகர்கள் தக்க பதில் அளித்துள்ளனர்.
மாநிலக் கல்வியில் ஆங்கிலம், தாய் மொழி தவிர்த்து இந்தியையும் சேர்த்து மூன்று மொழி கொள்கையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்தி மொழியை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் மாநிலக் கல்வியில் இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம் என்று தென்னிந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
#StopHindiImposition என்ற ஹேஷ்டேக்குடன் தங்களின் எதிர்ப்பை ட்விட்டரில் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் இல்லை என்றாகிவிட்டது.
இந்தி திணிப்புக்கு எதிராக தென்னிந்தியர்கள் ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது பஞ்சாபை சேர்ந்தவர் மரியான் பட பாடலை பாடும் வீடியோவை வெளியிட்டு பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்று ஆங்கிலத்தில் ட்வீட் போட்டு கலாய்த்திருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
இந்நிலையில் வரைவுத் திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதை அறிந்த அவர், அழகிய தீர்வு "தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!" என்று தூய தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
அவர் தமிழில் ட்வீட் செய்திருப்பதால் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டு இந்தி பேசுவர்கள் கமெண்ட் போட்டுள்ளனர். அதற்கு தமிழ் ரசிகர்களோ, நீங்க தமிழ்நாட்டில் பானி பூரியை விற்கலாம் இந்தியை அல்ல என்று கூறி கலாய்த்துள்ளனர்.
அழகிய தீர்வு என்று தான் சொல்ல விரும்பியதை சுருக்கமாக சொன்ன ரஹ்மானை ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். அதிகம் பேசாமல் இசை மூலம் பேசும் ரஹ்மானை எங்களுக்கு பிடித்துள்ளது. இவரை பார்த்தாவது அவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் பிரபலம் ஒருவரை வம்புக்கு இழுத்துள்ளனர்.
ட்விட்டரில் கருத்துகள் சொல்வதில் வல்லவராக உள்ளார் ரஹ்மான். அதிகம் டைப் பண்ண மாட்டார், ஆனால் அவர் போடும் ட்வீட் பற்றி நாள் முழுக்க நெட்டிசன்களை பேச வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.