மன்னர் மன்னனாக நடித்து மனநோய் வந்துவிட்டதோ என பதறிய "ஜோக்கர்"
சென்னை: ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரிய வரவேற்பு பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தில் மன்னர்மன்ன்னாக வந்து நம்மை அசரடித்தவர் குருசோமசுந்தரம். அடிப்படையிலேயே நடிப்பு பயிற்சி கொடுப்பவர் என்பதாலேயோ என்னவோ இவர் ஏற்றுக்கொள்ளும் கேரக்டர்கள் எல்லாவற்றையுமே பேசவைத்துவிடுவார்.
அப்படி அவரது கெரியரிலேயே மிக முக்கியமான படமாக ஜோக்கர் அமைந்துவிட்டது. இரண்டு வித கேரக்டர்களுக்கும் அனாயசமாக வித்தியாசம் காட்டியிருந்தார். இந்த படத்துக்காக மன்னர்மன்னனாக மாறிய சோமசுந்தரம் அதைவிட்டு வெளியே வர ரொம்பவே சிரமப்பட்டாராம்.
தன் உடல் மொழியில் இருந்து பேச்சு வரை அந்த பாதிப்பு இருந்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் மனநோய் வந்துவிட்டதோ என்று பதறும் அளவுக்கு மாறியிருக்கிறார். அந்த கேரக்டரில் வெளியே வருவதற்காக களரி கலை பயின்று மனதை மாற்றியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











