என்னால் சிவகார்த்திகேயன் மாதிரி மேடையில் அழ முடியாது: கவுதம் மேனன்
சென்னை: தன்னால் சிவகார்த்திகேயனை போன்று மேடையில் அழ முடியாது என இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா இழு இழுவென இழுத்து ஒரு வழியாக நாளை ரிலீஸாக உள்ளது.

படம் தாமதமானதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. அதில் சிம்புவின் சேட்டையும் ஒன்று என்று பேசப்பட்டது. இந்நிலையில் கவுதமம் மேனன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
என் படங்கள் எல்லாம் ஏன் தாமதம் ஆகின்றன என்றே தெரியவில்லை. அதற்காக என்னால் சிவகார்த்திகேயனை போன்று மேடையில் அழ முடியாது. சிம்பு என் நண்பர். இனியும் அவருடன் படம் பண்ணுவேன் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications