விஸ்வரூப வெற்றி.. தமிழக மக்களுக்கு கமல் நன்றி

By Mayura Akilan

சென்னை: விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் தமிழக மக்கள் காட்டிய அன்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

விஸ்வரூபம் திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று வெளியானது. தமிழ்நாட்டில் 600 தியேட்டர்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கமல் ரசிகர்கள் தியேட்டர்களில் உற்சாகமாக படம் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

 Kamal Haasan
ரசிகர்களின் வார்த்தைகளில் சந்தோசம் கொப்பளிக்கிறது. இது ஹாலிவுட் தரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படத்தைக் கொடுத்த கமலுக்கு நன்றி என்று ரசிகர்கள் கூறினார்கள்.

இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கூறியதாவது:

தடைகள் பல தாண்டி இன்று விஸ்வரூபம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்பட விவகாரத்தில் தமிழக மக்கள் காட்டிய அன்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

விஸ்வரூபம் விவகாரத்தையடுத்து திரைப்பட தணிக்கைச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாராட்டுகள். தணிக்கை வழங்குவதில் ஒரே சீரான முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஏற்பட்ட காலதாமதத்தினால் அடுத்த பட வேலை தாமதமாகிவிட்டது என கமல்ஹாசன் தெரிவித்தார். தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்ற முடிவில் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X