எனக்கும், கணேஷுக்கும் ஃபைட், பிரிந்து வாழ்கிறோம்: குண்டு ஆர்த்தி
சென்னை: கணேஷை விவாகரத்து செய்துவிட்டதாக பரவிய வதந்தி குறித்து நடிகை ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை குண்டு ஆர்த்தியும், அவரது கணவர் கணேஷும் விவாகரத்து செய்து கொண்டதாக வாட்ஸ்ஆப்பில் வதந்தி பரவியது. இந்நிலையில் இது குறித்து ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
விவாகரத்து குறித்து அவர் கூறுகையில்,

பிரச்சனை
எனக்கும், கணேஷுக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து வசிக்கவில்லை. நான் எங்காவது சென்றால் உங்கள் கணவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டால் அது எப்படி எனக்கு தெரியும் என்பேன்.

விவாகரத்து
தற்போது விவாகரத்து தான் டிரெண்ட். அப்படி பார்த்தால் நாங்கள் டிரெண்டில் இருக்கிறோம்ல. புருஷன், பொண்டாட்டின்னா பிரச்சனை வரணும். இல்லை என்றால் நன்றாக இருக்காது.

பேச்சு
ஒரு புருஷன், பொண்டாட்டி பிரச்சனை இல்லாமல் வாழ்ந்தால் அவர்களை பற்றி யாரும் பேச மாட்டார்கள். பிரச்சனை வந்தால் அவர்களை பற்றியே பேசுவார்கள். இப்போது எங்களை பற்றி பேசுகிறார்கள்ல.

கோவில்
நானும், கணேஷும் சேர்ந்து சனிக்கிழமை கோவிலுக்கு சென்றோம். நாங்கள் ஜோடியாக சென்றதை யாரும் பார்க்கவில்லை. விவாகரத்து கொடுத்தால் அது சுதந்திரம் கொடுப்பது ஆகும். நான் கணேஷை ஆயுள் சிறையில் வைத்துள்ளேன்.


Click it and Unblock the Notifications











