Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினி, விஜய்க்கு ஜோடி... நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்! - எமி ஜாக்ஸன்
ரஜினியுடன் 2.ஓ, விஜய்யுடன் தெறி படங்களில் நடித்ததன் மூலம் என் கனவு நனவாகிவிட்டது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றார் நடிகை எமி ஜாக்ஸன்.
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் இவ்வளவு செலவழித்து எடுக்கப்படும் முதல் படம் இதுதான்.
ரஜினிக்கு வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.
இந்தப் படத்தில் பணியாற்றுவது குறித்து நடிகை எமி ஜாக்ஸன் கூறுகையில், "சென்ற வாரம் ரஜினி - அக்ஷய் குமார் தொடர்புடைய ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதுவரை படப்பிடிப்பு மிக நல்ல அனுபவமாக உள்ளது. மே மாதம் மீண்டும் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ரோபோ கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.
நான் வியந்து பார்த்த நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு அடுத்து நான் ஆச்சர்யமாய்ப் பார்த்தது விஜய்யை. இந்த இருவருக்கும் ஜோடியாக நான் நடித்துவிட்டேன்.
இப்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல உணர்கிறேன்," என்கிறார்.