Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரிலீஸ் ஆகும் பயோபிக்.. ஷகிலாவாக என்னை எப்படி ஏத்துக்குவாங்களோ.. பிரபல நடிகை ஆர்வம்!
சென்னை: நடிகை ஷகிலாவாக, ரசிகர்கள் எப்படி ஏற்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்று பிரபல நடிகை தெரிவித்து உள்ளார்.
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமாவாகி இருக்கிறது. இதில் ஷகிலாவாக இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார்.
பங்கஜ் திரிபாதி உட்பட பலர் நடித்துள்ளனர். கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார்.
நடிகர், நடிகைகள்
இவர் சமீபத்தில் போதை பொருள் விவகாரத்தில் பல நடிகர், நடிகைகள் பெயரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்தவர். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது முடிந்துவிட்டது. கொரோனாவால் ரிலீஸ் தாமதமான படங்களில் இதுவும் ஒன்று, இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் டப் ஆகி வெளியாகிறது.
சினிமா துறை
இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி நடிகை ஷகிலா அளித்த பேட்டியில் சமூகத்தில் பலரால் ஏமாற்றப்பட்டேன். குடும்ப உறவினர்களிடம் ஏமாந்துள்ளேன். யாரிடமும் ஏமாந்து விட வேண்டாம் என்பதை சினிமா துறைக்கு வரும் பெண்களுக்கு கூற விரும்புகிறேன். இதைத்தான் படமாக்கி இருக்கிறார்கள்' என்று கூறியிருந்தார்.
ஆர்வமாக இருக்கிறேன்
இந்நிலையில், இந்தப் படம் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு வரும் நடிகை ரிச்சா சதா படம் பற்றி கூறியிருப்பதாவது: நடிகை ஷகிலாவாக, தென்னிந்திய ரசிகர்கள் என்னை எப்படி ஏற்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஷகிலாவின் படங்கள் மற்றும் அவரைப் பற்றி ரசிகர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
சொந்த வாழ்க்கை
அவர் கேரக்டரை சரியாகச் செய்திருக்கிறேனா இல்லையா என்பதை ரசிகர்கள்தான் சரியாக கணிக்க முடியும் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, படத்தில், ஷகிலாவின் திரை வாழ்க்கையை விட சொந்த வாழ்க்கையில்தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறோம்.
பொருந்த முடிந்தது
அவருடைய உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களால் அவர் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பதை சொல்லி இருக்கிறோம். அந்தப் பாதிப்பை என்னோடு தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்ததால், அந்த கேரக்டருடன் என்னால் பொருந்த முடிந்தது. இவ்வாறு நடிகை ரிச்சா சதா கூறியுள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகிறது.