ரஜினி படத்தை இயக்குகிறேனா? - பி வாசு விளக்கம்
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து நான் படம் இயக்குவதாக வருகின்ற செய்திகள் தனக்கு மிகுந்த சங்கடத்தை உள்ளாக்கியிருப்பதாகவும், அப்படி ஒரு திட்டம் தன்னிடம் இல்லை என்றும் இயக்குநர் பி வாசு கூறியுள்ளார்.
கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் இளைய மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தை முடித்ததும், அடுத்து ராணாவில் நடிப்பார் ரஜினி என்று கூறப்பட்ட நிலையில், திடீர் திடீரென ரஜினி இந்தப் படத்தில் நடிக்கிறார், இன்னாருடன் இணைகிறார் என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
முதலில் ரஜினியும் - ஷங்கரும் இணைந்து படம் பண்ணுகிறார்கள். இது முதல்வனின் இரண்டாம் பாகம். இந்தப் படம் முடிந்ததும் ராணா என்று கூறப்பட்டது.
அடுத்த சில தினங்களில், சிவாஜி பிலிம்ஸுக்காக பி வாசு இயக்கத்தில் ஒரு குறுகிய கால படத்தில் ரஜினி நடிப்பார் என்று செய்தி வந்தது. கடந்த வாரம் முழுக்க இந்த செய்திதான் மீடியாவில் அதிக முக்கியம் பெற்றுவருகிறது.
இந்த நிலையில், ரஜினியுடன் இப்போதைக்கு தாம் இணைந்து படம் எதுவும் பண்ணவில்லை என்று இயக்குநர் பி வாசு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், "இது முழுக்க முழுக்க யூகத்தில் வெளியாகியுள்ள செய்திதான். நான் சமீபத்தில் ரஜினியிடம் படம் பண்ணுவது குறித்து பேசவே இல்லை. எனது அடுத்த கன்னடப் படம் 'ஆ ரக்ஷகா'வில் பிஸியாக இருக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











