நான் இன்னும் தீபிகாவுடன் டச்சில் தான் இருக்கேன்: முன்னாள் காதலர் ஜூனியர் மல்லையா
மும்பை: தான் இன்னும் தீபிகா படுகோனேவுடன் தொடர்பில் இருப்பதாக அவரது முன்னாள் காதலர் சித்தார்த் மல்லையா தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. அவர் வாழ்வில் பல காதலர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா.
அவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோடியாக வலம் வந்தனர்.

முத்தம்
2013ம் ஆண்டில் ஐபிஎல் போட்டியின்போது விஜய் மல்லையா அருகில் நின்று கொண்டு சித்தார்த்தும், தீபிகாவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரன்வீர் சிங்
சித்தார்த்தை பிரிந்த தீபிகா தற்போது நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். இந்நிலையில் சித்தார்த் தீபிகா பற்றி பேட்டி அளித்துள்ளார்.

சித்தார்த்
நான் தற்போதும் தீபிகாவுடன் தொடர்பில் உள்ளேன். அவரின் வெற்றிக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஹாலிவுட் செல்வது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்கிறார் சித்தார்த்.

காதல்
வெளிநாட்டில் நடிப்பு தொடர்பாக படிக்கும்போதிலும் நான் பாலிவுட்டில் நடிக்க விரும்பவில்லை. நான் தற்போது ஒருவரை காதலிக்கிறேன். ஆனால் அவரின் பெயரை தெரிவிக்க மாட்டேன் என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











