Don't Miss!
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்
சென்னை: பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றிருக்கக் கூடாது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த ஹைதராபாத் சென்ற இடத்தில் டிவி 9 தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார் தனுஷ். அப்போது சுசீலீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை பற்றி கேள்வி கேட்டதும் கோபித்துக் கொண்டு பாதியிலே கிளம்பிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து தனுஷ் தற்போது கூறியிருப்பதாவது,
அமைதி
பேட்டியின்போது நான் அப்படி நடந்திருக்கக் கூடாது. பொதுவாக நான் அமைதியான ஆள். ஆனால் நான் எப்படி நடந்திருக்கக் கூடாதோ அப்படி நடந்துவிட்டேன்.
கேள்வி
பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்காக நான் இப்படி நடந்திருக்கக் கூடாது தான். என் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் நான் இரண்டு வாரங்களாக தூங்கவில்லை.
ஆச்சரியம்
அந்த பேட்டியில் நான் நடந்து கொண்ட விதத்தை பார்த்து எனக்கே ஆச்சரியமாக உள்ளது. வேறு கேள்வி கேட்குமாறு பேட்டி எடுத்தவரிடம் நான் கூறியிருக்க வேண்டும் என்றார் தனுஷ்.
விஐபி 2
தனுஷ் நடிகை கஜோல் மற்றும் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்துடன் சேர்ந்து விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.