Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாலியல் தொல்லை: வரலட்சுமியை அடுத்து நடிகை சந்தியா பகீர் தகவல்
சென்னை:
பாவனா போன்று தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாக நடிகை சந்தியா தெரிவித்துள்ளார்.
காதல் படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனவர் சந்தியா. காதல் சந்தியா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவரால் தமிழ் திரையுலகில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை.
தன்னை தேடி வந்த படங்களில் நடித்தார்.
திருமணம்
திரையுலகில் வாய்ப்பு இல்லாததையடுத்து அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அவர் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பாவனா
பாலியல் சில்மிஷத்திற்கு ஆளான பாவனா என் தோழி தான். அவருக்கு போன்று எனக்கும் நடந்துள்ளது. சிலர் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். கூட்டமான இடங்களாக இருந்ததால் அது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் சந்தியா.
துணிச்சல்
பாவனா தனக்கு நடந்த கொடுமை குறித்து துணிச்சலாக புகார் கொடுத்ததால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவரின் துணிச்சலை பார்த்து பிற நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர் என்று சந்தியா தெரிவித்தார்.
குற்றம்
சிலர் செய்யும் பாலியல் சில்மிஷத்தை வெளியே சொன்னால் நம் பெயர் கெட்டுவிடுமோ என பயந்து பயந்து மூடி மறைப்பதால் அந்த குற்றம் தொடரத் தான் செய்யும். தைரியமாக வெளியே சொன்னால் தான் அது போன்ற குற்றங்கள் குறையும் என சந்தியா கூறினார்.