செக்ஸ் காட்சி: தயங்கிய ஹீரோ-இயக்குனர், தைரியம் சொல்லி நடித்த நடிகை
மும்பை: பாபுமோஷாய் பந்தூக்பாஸ் படத்தில் வந்த செக்ஸ் காட்சிகளில் நடிக்க தயங்கவில்லை என்று நடிகை பிடிதா பாக் தெரிவித்துள்ளார்.
நவாஸுத்தீன் சித்திக்கி, பிடிதா பாக் உள்ளிட்டோர் நடித்த பாபுமோஷாய் பந்தூக்பாஸ் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்தை நவாஸுத்தீனால் கூட காப்பாற்ற முடியவில்லை என்று விமர்சனம் எழுந்தது.
படத்தில் செக்ஸ் காட்சிகள் அதிகம். இந்நிலையில் இது குறித்து பிடிதா கூறியதாவது,

காட்சிகள்
நான் முன்பும் கூட படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளேன். நவாஸுக்கு தான் இது முதல் முறை. அந்த காட்சிகளில் நடிக்க எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

சித்ரங்கதா சிங்
செக்ஸ் காட்சிகளில் நடித்து முடித்த பிறகு சித்ரங்தா சிங் எதற்காக படத்தில் இருந்து வெளியேறினார் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் எது நடந்தாலும் எனக்கு நல்லதாக நடந்துவிட்டது.

பொறுப்பு
செக்ஸ் காட்சிகளுக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். முதலில் அந்த காட்சிகளை படமாக்கியபோது ஃபீலிங்கே இல்லை. ஏற்கனவே ஒரு நடிகை படத்தில் இருந்து வெளியேறியதால் இயக்குனர் எதையும் சொல்ல பயந்தார்.

நடிப்பு
காட்சிகளில் உயிர் இல்லை என்பதை இயக்குனர் குஷன் நந்தியின் முகத்தில் பார்த்தேன். ரிலாக்ஸாக இருங்கள், ரீடேக் வேண்டும் என்றால் கேளுங்கள் நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று இயக்குனருக்கு தைரியம் சொன்னேன்.

ஒழுங்காக
செக்ஸ் காட்சிகளை படமாக்க வேண்டும் என்றால் அதை ஒழுங்காக செய்ய வேண்டும். செக்ஸ் காட்சிகளில் அசிங்கம் இல்லை. சில ரசிகர்களுக்கு அது படிக்கும், சிலருக்கு பிடிக்காது என்றார் பிடிதா.


Click it and Unblock the Notifications











