Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அட்ஜஸ்ட் பண்ணாததால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?: ப்ரியங்கா சோப்ரா பேட்டி
Recommended Video
மும்பை: பாலிவுட்டில் அட்ஜஸ்ட் செய்யாததால் தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து மனம் திறந்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்கள், தொலைக்காட்சி தொடர் என்று அசத்திக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட்டில் அவர் அடைந்துள்ள வெற்றியை பார்த்து சில பாலிவுட் நடிகைகள் பொறாமையில் உள்ளனர்.
இந்நிலையில் சினிமா பற்றி ப்ரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது,
வாய்ப்புகள்
சிலர் பரிந்துரைக்கப்பட்டதால் என்னை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு ஹீரோ அல்லது இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க பரிந்துரை செய்யப்பட்டதால் என்னை வெளியேற்றியுள்ளனர்.
இயக்குனர்
ஹீரோ அல்லது இயக்குனரின் காதலிக்காக என் வாய்ப்பு பறிக்கப்பட்டபோது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன்.
நடிகர்கள்
நான் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய மறுத்துவிட்டேன். எனக்கு மரியாதை அளிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன்.
ஆதரவு
நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் ஆதரவாக உள்ளது. அது தான் என் மிகப் பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் என்றார் ப்ரியங்கா சோப்ரா.