Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யாரைப் பற்றியும் புறம்பேசாத புண்ணியவதி மனோரமா: வைரமுத்து
சென்னை: தன்னைப் பொறுத்த வரை ஒரு நல்ல பாடகியை இழந்துவிட்டதாக மனோரமாவின் இழப்பு பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். யாரைப் பற்றியும் புறம் பேசாதவர் ஆச்சி என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மனோரமா ஆச்சியின் மறைவையொட்டி பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தமிழ் திரையுலகம் தாயை இழந்து வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆச்சியின் மறைவு பற்றி கவிஞர் வைரமுத்து கூறுகையில்,
யாரைப் பற்றியும் புறம்பேசாதவர் மனோரமா ஆச்சி. யாரும் புறம் பேசாதீர்கள் என்பது தான் ஆச்சி நமக்கு விட்டுச் சென்ற செய்தி. என்னைப் பொறுத்த வரை ஒரு நல்ல பாடகியை இழந்துவிட்டோம்.
அவர் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது தில்லானா மோகனாம்பாள் படத்தில் அவர் நடித்த ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் தான் என்றார்.