Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'வாழ்வில் மறக்க முடியாத நாள்...': இளையராஜாவிடம் ஆசி பெற்ற 'ருத்ரமாதேவி' அனுஷ்கா பரவசம்!
இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்து ஆசி பெற்றார் ருத்ரமாதேவி நாயகி அனுஷ்கா.
குணசேகர் தயாரிப்பு இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி வரும் பிரமாண்டமான சரித்திப் படம் ருத்ரமாதேவி. இந்தப் படம் 3 டியில் தயாராகியுள்ளது.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பாடல்கள் ஆந்திராவில் வெளியாகின. விசாகப்பட்டணம் மற்றும் வராங்கல் நகர்களில் இரு வேறு விழாக்கள் மூலம் இசைத் தட்டு வெளியிடப்பட்டது.
லண்டனில் இசைச் சேர்ப்பு
இப்போது பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் நடக்கின்றன. படத்தின் ஜீவனே பின்னணி இசையில் இருப்பதால், லண்டனில் வைத்து இசைக் கோர்ப்புப் பணிகளைச் செய்கிறார் இளையராஜா.
அனுஷ்கா ஆசை
இதற்காக இன்று அவர் லண்டன் கிளம்புகிறார். அதற்கு முன் அவரைச் சந்தித்து ஆசி பெற விரும்பினார் நாயகி அனுஷ்கா. இளையராஜாவின் அதி தீவிர ரசிகை இவர். ராஜா லண்டன் கிளம்புவதற்குள் அவரைப் பார்க்க விரும்பிய அனுஷ்கா, நேற்று விமானத்தில் சென்னை வந்தார்.
ஆசி பெற்றார்
நேராக பிரசாத் ஸ்டுடியோவுக்குச் சென்றவர், அங்கு இளையராஜாவைச் சந்தித்து மலர்க் கொத்து அளித்தார். இளையராஜாவும் அவருக்கு வாழ்த்தும் ஆசியும் கூறினார்.
பின்னர் இளையராஜாவுடன் படங்கள் எடுத்துக் கொண்ட அனுஷ்கா, படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறினார்.
மறக்க முடியாத நாள்
இளையராஜாவைச் சந்தித்தது குறித்து கூறிய அனுஷ்கா, "என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இது," என்றார்.
அப்போது இயக்குநர் குணசேகர், பாடலாசிரியர் பா விஜய், தயாரிப்பாளர் முரளி ராம நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.