Don't Miss!
- News அமெரிக்காவை உலுக்கிய பால்டிமோர் பாலம் விபத்து! மேலும் 2 பேர் சடலமாக மீட்பு! தேடுதல் பணி தீவிரம்
- Finance ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Sports ஹர்திக் பாண்டியா செய்த செயல்.. மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு காரணமே அதுதான்.. கொதித்த ரசிகர்கள்
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர்
Recommended Video
டெல்லி: நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதினை இன்று இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இந்தியாவின் மிக உயர்ந்த விருது பாரத் ரத்னா. அதற்கு அடுத்த நிலையில் இருப்பது பத்மவிபூஷண். இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது, நாட்டின் ஒப்பற்ற இசை அமைப்பாளரான இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே 5 முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றவர் இளையராஜா. ஏற்கெனவே பத்மபூஷண் விருதினையும் அவர் இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளார்.
2018-ம் ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை இன்று டெல்லியில் நடந்த விழாவில் இளையராஜாவுக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பத்ம விருதுகள் பெற்ற வேறு சில கலைஞர்கள், பிரமுகர்களுக்கும் இன்று குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கினார்.