ஃபேஸ்புக்கில் நேரடியாக இளையராஜா... மூன்றே நாட்களில் 1.2 மில்லியன் ஃபாலோயர்கள்!
ஃபேஸ்புக்கில் இளையராஜாவுக்கென அவரது ரசிகர்கள் ஏராளமான தனிப் பக்கங்கள் உருவாக்கி வைத்திருந்தனர். ஒவ்வொரு பக்கத்துக்கும் ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக் கணக்கில் லைக்குகள், ஃபாலோயர்கள்.
அவரவருக்குத் தோன்றிய, தெரிந்த கருத்துகளை எழுதிப் பகிர்ந்து வந்தனர். அவற்றில் தவறான பல தகவல்களும் சேர்ந்தே வெளியாகின. சிலர் அந்த பக்கங்களை தவறாகவும் பயன்படுத்துவதாக அடிக்கடி புகார் எழுந்தது.

இதையெல்லாம் சரி செய்து, ஒரே பெயரில் இயங்க வைக்க வேண்டும் என பெரும் முயற்சி மேற்கொண்டார் இளையராஜா. அதன் விளைவாக தாமே நேரடியாக ஃபேஸ்புக்கில் இணைந்து, ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க முடிவு செய்தார்.
அதன்படி கடந்த மார்ச் 20 ம் தேதி முதல் ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தார் ராஜா.
அவர் ஃபேஸ்புக்கில் நுழைந்த மூன்றே தினங்களில் 1.2 மில்லியன் பேர் அவரைப் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.
தான் பேஸ்புக்கில் நுழைந்தது குறித்து இளையராஜா பதிவேற்றியுள்ள வீடியோ:


Click it and Unblock the Notifications











