Don't Miss!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உரிமம் இல்லாத பாடல் சி.டி.க்கள் விற்பனை: சி.பி.சி.ஐ.டி.யில் இளையராஜா புகார்
சென்னை: தான் இசையமைத்த பாடல்களின் சி.டி.க்கள் உரிமம் இன்றி சென்னை பர்மா பஜாரில் விற்பனை செய்யப்படுவதாக சி.பி.சி.ஐ.டி.யில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் செய்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் இளையராஜா சார்பில், அவரது வக்கீல் புதன்கிழமை அளித்த புகார் மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
"நான் இசையமைத்த பாடல்களை சில நிறுவனங்களுக்கு மட்டும் சி.டி.யாக குறிப்பிட்ட காலத்துக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருந்தேன். இதற்காக அவர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தேன். இந்நிலையில், ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் சிலர், எனது பாடல்களை எவ்வித உரிமமும், அனுமதியும் இன்றி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பர்மா பஜாரில் உள்ள சில கடைகளில் உரிமம் இல்லாத எனது பாடல் சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் விளைவாக பல்வேறு வகைகளில் எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நான் இசையமைத்த பாடல்களை எவ்வித உரிமமோ, அனுமதியோ இன்றி விற்பவர்கள் மீது காப்புரிமைச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தயாரிப்பாளர் சங்கம் சார்பில்...
இதேபோல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.தாணு, துணைத் தலைவர் எஸ்.கதிரேசன், நிர்வாகிகள் டி.ஜி. தியாகராஜன் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
இந்த மனுவில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்களின் சி.டி.க்களை உரிய அனுமதியின்றி தயாரிப்பவர்கள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த இரு மனுக்களையும் சி.பி.சி.ஐ.டி. திருட்டு சி.டி. ஒழிப்புப் பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமி பெற்றுக் கொண்டார்.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!