Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனி என் அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை - இளையராஜா எச்சரிக்கை
சென்னை: இனி என் அனுமதியின்றி என் இசையையோ, பாடல்களையோ பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த 1976-ம் ஆண்டு அன்னக்கிளி தொடங்கி, இன்று வரை பரபரப்பான இசையமைப்பாளராகத் திகழ்கிறார்.1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, 6500-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியுள்ளார். சிறந்த இசையமைப்புக்காக 5 முறை தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.
தடை
இந்நிலையில், இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்களை இவருடைய அனுமதியின்றி சில நிறுவனங்கள் விற்பனை செய்து வருவதாக கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி, இவரது பாடல்களை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிரந்தர தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
தயாரிப்பாளர் சங்கத்திடம்
இந்நிலையில், இளையராஜா தனது பாடல்களின் உரிமையை தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்கியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான கலைப்புலி தாணுவிடம் இவருடைய 1000 படங்களின் பாடல்கள் உரிமைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பேட்டி
இதுகுறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த இளையராஜா கூறும்போது, "இனிமேல் என்னுடைய இசையை அதிகாரப்பூர்வமாக உலகளவில் எந்தவொரு மொபைல் நிறுவனமும், உலகளாவிய இணையதளங்களிலும், யூடியூப், டெய்லி மோஷன் போன்ற இன்னும் பல வீடியோ இணைய தளங்களிலும், ஆடியோ, வீடியோ விளம்பரங்களிலும், ரீமிக்ஸ் செய்யவோ, எப்.எம்., டிவியில் ஒலி / ஒளிபரப்பவோ, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் முறையற்ற வகையில் இசையை உபயோகிக்கவோ தயாரிப்பாளர் சங்கம் மூலம் என்னிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
கடும் நடவடிக்கை
விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
இந்தப் பேட்டியின்போது கலைப்புலி தாணுவும் உடனிருந்தார்.