Don't Miss!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இளையராஜாவின் மேகா... பரவசத்தில் ரசிகர்கள்!
நீதானே என் பொன்வசந்தத்துக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்துள்ள மேகா படத்தின் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேகா படத்தின் இசை சில தினங்களுக்கு முன் லண்டனில் கமல்ஹாஸனால் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தின் சிடிக்காக பல ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இளையராஜா கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றனர்.
இந்தப் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
முகிலோ மேகமோ பாடலை யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ளனர். இதே பாடலை இளையராஜாவும் பாடியுள்ளார். மிகச் சிறப்பான மெட்டு, மனதை வருடும் இசைக் கட்டமைப்பு. நா முத்துக்குமார் எழுதிய பாடல் இது.
செல்லம் கொஞ்சும் (பழனி பாரதி) என்ற பாடலையும் யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ளனர். இந்தப் பாடலும் மிக இனிமையாக ஒலிக்கிறது.
கார்த்திக், ப்ரியதர்ஷினி இசையில் ஒலிக்கும் 'என்ன வேண்டும்' (நா முத்துக்குமார்) பாடல், ராஜாவின் இசை ஆளுமையை உணர்த்துகிறது.
இளையராஜா குரலில் வரும் ஜீவனே ஜீவனே.. உயிரை உருக்குகிறது.
எண்பதுகளில் வெளியாகி இன்றுவரை கேட்கும்போதெல்லாம் மனதை வருடும் புத்தம் புதுக் காலை பாடலை இந்த ஆல்பத்தில் சேர்த்துள்ளனர். பழைய பாடலை ஜானகி பாடியிருந்தார். இந்தப் புதிய வர்ஷனை அனிதா பாடியுள்ளார். கங்கை அமரன் எழுதிய பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்வனே கள்வனே என்ற பாடல் ஹரிச்சரண், என்எஸ்கே ரம்யா குரல்களில் மனதை மயக்குகிறது (நா முத்துக்குமார்).
முகிலோ மேகமோ பாடல் இளையராஜாவின் குரலிலும் ஒரு முறை ஒலிக்கிறது. சான்சே இல்லை. யுவன் குரலில் கேட்டதைவிட, ராஜா குரலில் தனி பரவசத்தை உணர முடிந்தது.
இப்போது ரசிகர்கள் கவலையெல்லாம் இந்தப் பாடலை படத்தில் சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டுமே என்பதுதான்.