Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதல் சந்திப்பில் பாரதிராஜாவிடம் அதிர வைக்கும் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் ரேவதி
சென்னை: நடிகை ரேவதி கடைசியாக தனுஷ் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
80, 90-களில் முன்னணி நடிகையாக இருந்த ரேவதி இன்றுவரை நிலைத்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்ததுதான்.
இந்நிலையில் தனது முதல் படமான மண் வாசனை திரைப்படத்தில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
மௌன ராகம் திரைப்படத்திற்காக நானும் புரடியூசர்கள் தேடி அலைந்துள்ளேன்... நடிகை ரேவதி ஃப்ளாஷ் பேக்
கல்லுக்குள் ஈரம்
தனது முதல் படமான 16 வயதினிலே மூலமாகவே மொத்த தமிழ்நாட்டையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பாரதிராஜா. முதல் 5 படங்களில் வெற்றி கண்டவர் ஆறாவதாக நடித்து இயக்கிய கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் முதல் தோல்வியை கண்டார். மண்வாசனை படத்திற்காக முதன்முறையாக ரேவதி பாரதிராஜாவை சந்தித்தபோது, இதற்கு முன் என் படங்களை பார்த்திருக்கிறாயா என்று கேட்டிருக்கிறார். அதற்கு கல்லுக்குள் ஈரம் மட்டும் பார்த்திருக்கிறேன் என்று சொல்ல, உனக்கு வேறு படமே கிடைக்கவில்லையா என்பது போல் பார்த்தாராம்.
முதல் அறை
பொதுவாகவே நடிகர் நடிகைகள் சரியாக நடிக்காவிட்டால் அவர்களை பாரதிராஜா அடிப்பார் என ஒரு பேச்சு உண்டு. இதை குறிப்பிட்டு ரேவத்தியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, மண் வாசனையில் ஒரே ஒரு காட்சியில் அறை வாங்கினேன். அதுகூட நான் சரியாக நடிக்கவில்லை என்று கோபத்தில் அவர் அறைந்ததாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில்தான் அந்த அறை இருந்தது என்று ரேவதி கூறியிருக்கிறார். ஆனால், பாரதிராஜாவிற்கு முன்னரே பாண்டியனிடம் அறை வாங்கினாராம்.
பாண்டியனின் அறை
ஒரு காட்சியில் பாண்டியன் ரேவதியை அறைய வேண்டுமாம். பாண்டியனுக்கும் அது முதல் படம் என்பதால் இரண்டு மூன்று டேக்குகள் சரியாக அடிக்காததால் கோபமான பாரதிராஜா பாண்டியனுக்கு ஒரு அறை கொடுத்து ஒழுங்காக நடிக்கச் சொன்னாராம். அந்த மொத்த கோபத்தை பாண்டியன் என் மீது காட்டும் வகையில் என்னை ஓங்கி அறைய, அந்தக் காட்சி ஓகே ஆனது. இன்னும் கூட அந்த ஷாட்டை படத்தில் பார்த்தால் அவரது நான்கு விரல்களும் எனது கன்னத்தில் பதிந்திருக்கும். அதனால், பாரதிராஜாவிடம் அடி வாங்குவதற்கு முன்னதாகவே பாண்டியனிடம் அடி வாங்கினேன் என்று ரேவதி கூறியுள்ளார்.
ரேவதியின் சந்தேகம்
முதன் முறையாக பாரதிராஜாவை சந்தித்தபோது அவரிடம் ஒரு சந்தேகம் கேட்டுள்ளார் ரேவதி. சினிமாவில் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்பிடிப்பது போல் காட்சி வருகிறதே, அது பொய் தானே. இருவருக்கும் இடையில் ஒரு தலகாணியை வைத்துக் கொண்டுதானே கட்டிப்பிடிப்பார்கள் என்று ஒரு கேள்வியை கேட்டாராம். பாரதிராஜாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்துவிட்டு, இந்த பெண்ணை எப்படி நடிக்க வைக்க போகிறேன் என்று உடனிருந்தவர்களிடம் கூறியதாக ரேவதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி