Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பொறுப்பற்ற அரசு... பேராசை கொண்ட தியேட்டர்கள்.. போங்கய்யா நீங்களும் உங்க சினிமாவும்!
எத்தனை மொழிகளில், வித விதமாகச் சொன்னாலும் திரையரங்குகள் டிக்கெட் உயர்த்துவதும் அதை அரசே ஊக்குவிப்பதும் கடைந்தெடுத்த மக்கள் விரோதம்.
சினிமாதானே... பார்க்கலன்னா குடியா முழுகிடும்... கட்டணம் அதிகம்னு நினைச்சா பாக்காம போறதுதானே என்று வழக்கம்போல சிலர் அறிவுஜீவித்தனம் காட்டக்கூடும். இவர்களால் நாட்டுக்கும பிரயோஜனமில்லை, சினிமாவுக்கும் நன்மையில்லை. இவர்களெல்லாம் தியேட்டர் பக்கம் ஒன் போகக் கூட ஒதுங்காதவர்கள்.
மக்களுக்கு இன்று வெவ்வேறு பொழுதுபோக்குகள் இருந்தாலும், சினிமாதான் பிரதானம். ஊடகங்களில் சினிமா செய்திகளுக்குத்தான் முதலிடம். திருட்டு வீடியோ வந்து சினிமாவை பாதித்தாலும், இன்னும் நாயகர்கள் 40- 50 கோடிகளில் சம்பளம் வாங்கக் காரணம், சினிமா இன்னமும் தன் பிடியை மக்களிடம் இழக்காமல் இருப்பதுதான்.
ஆனால் இனியும் இந்த நிலை தொடரும் என்று சொல்வதற்கில்லை. காரணம், பொழுதுபோக்கின் விலை அதிகரிக்க அதிகரிக்க அது மக்களிடமிருந்து அந்நியமாகிவிடும். தமிழ் சினிமாவை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் வேலையைத்தான் அரசும் திரையரங்க உரிமையாளர்களும் செய்து கொண்டிருக்கின்றன.
சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்த தமிழக அரசு அதனை மக்களிடமே வசூலித்துக் கொள்ளலாம் என்று கூறிவிட, 18 முதல் 28 சதவீதம் வரை விலையை உயர்த்திவிட்டன தியேட்டர்கள். கூடவே அங்கு வாங்கும் தின்பண்டங்களுக்கும் மனசாட்சியே இல்லாமல் ஜிஎஸ்டி வசூலிக்கிறார்கள். கேட்டால் ஏகத்துக்கும் சண்டை, கைகலப்புதான் மிச்சம்.
இப்போது உள்ளாட்சி வரி விதித்துள்ளது தமிழக அரசு. இந்தத் தொகையை மக்களிடம் வசூலிக்கும் கட்டணத்திலிருந்தே பிடித்து அரசுக்கு செலுத்த வேண்டும் என சொல்லக் கூடத் தோன்றவில்லை இந்த அரசுக்கு. டிக்கெட் விலையை 25 சதவீதம் வரை உயர்த்தி, அதிலிருந்து உள்ளூர் வரியைச் செலத்தலாம் என அரசு அறிவித்த சில நிமிடங்களிலேயே டிக்கெட் விலை மீண்டும் உயர்ந்துவிட்டது.
இத்தனை ஆண்டுகள் வரி விலக்கு என்ற பெயரில் கொள்ளையடித்து வந்தார்கள். வழக்குகூட தொடரப்பட்டது. ஆனால் வரி விலக்கு மக்களுக்கு அல்ல, சினிமாவுக்குத்தான் என்று வம்படியாய்ச் சொல்லி முழுசாக அனுபவித்தனர். இப்போது தங்கள் மீது விதிக்கப்பட்ட வரியை மக்களைக் கட்டச் சொல்கிறார்கள் சினிமாக்காரர்கள்.
அரசும் மக்களுக்கானதாய் இல்லை... சினிமா தியேட்டர்களும் மக்களைப் பற்றி யோசிப்பவர்களாக இல்லை. பலனை விரைவில் தியேட்டர்கள் அனுபவிக்கும்!