twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனிருத்துக்கு ரகசியமாக நிச்சயதார்த்தமா?: சமந்தா ஏன் அப்படி கேட்டார்?

    By Siva
    |

    சென்னை: இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக பேச்சு அடிபடுவதை அவர் மறுத்துள்ளார். ஆனால் நடிகை சமந்தா வேறு விதமாக கூறுகிறார்.

    இசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ரகசியமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகின.

    இதை பார்த்த அனிருத் ட்விட்டரில் அதை மறுத்துள்ளார்.

    நிச்சயதார்த்தம்

    நிச்சயம்? எனக்கா? ஹாஹாஹாஹாஹா. நான் சிங்கிள் மற்றும் யங்கு என்று அனிருத் திருமண நிச்சயதார்த்தம் பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    சமந்தா

    தான் சிங்கிள் என அனிருத் ட்வீட்டியிருப்பதை பார்த்த சமந்தா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆனால் அந்த பெண் ரொம்ப நல்லவள்.. என்ன நடந்தது? என கேட்டுள்ளார்.

    யார்?

    யார்?

    அனிருத்தை பார்த்து சமந்தா கேட்டுள்ள கேள்வியால் யாரு அந்த பெண், என்ன நடந்தது என்று ரசிகர்கள் ஆளாளுக்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆண்ட்ரியா

    ஆண்ட்ரியா

    அனிருத் ஒரு காலத்தில் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்ததாக கூறப்பட்டது. அவர்கள் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Music director Anirudh has rubbished the news that he is secretly engaged but actress Samantha's question raised doubts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X